Video of the Day

நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 34 பேர் பலி

பவுச்சி நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வடகிழக்கு நைஜீரிய நகரமான மைடுகுரியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு சந்தையில் நேற்றுமுன்தினம் இளம் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மைடுகுரி சந்தையில் கடந்த சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 54 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது
Share on Google Plus

About Namma Veedu real estate

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment