Video of the Day

மியான்மரில் படகு கவிழ்ந்து 50 பேர் பலி


undefined
யாங்கூன்,

மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்றுமுன்தினம் படகு ஒன்று சென்றது. இதில் 209 பயணிகள் பயணம் செய்தனர். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்த படகு, மோசமான வானிலை மற்றும் ராட்சத அலைகள் காரணமாக திடீரென கவிழ்ந்தது.

மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் மூழ்கிய 167 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலரை காணவில்லை. இந்த விபத்தில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அளவுக்கு அதிக அளவில் பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம். மியான்மரில் படகு விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய, பழமையான மற்றும் கூட்டநெரிசல் மிகுந்த கப்பல்களில் பயணம் செய்வதே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது
Share on Google Plus

About Namma Veedu real estate

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment